என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே மூதாட்டி சாவில் மர்மம்: மருமகள் போலீசில் புகார்
Byமாலை மலர்7 Jun 2017 12:19 PM GMT (Updated: 7 Jun 2017 12:19 PM GMT)
வேதாரண்யம் அருகே மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மருமகள் போலீசில் புகார் செய்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரத்தினம் (65). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் கடந்த 15 வருடத்துக்கு முன் இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து அவரது 2 மகன்களும் சொத்தை பிரித்து கொண்டனர். தாய்க்கும் சொத்து ஒதுக்கப்பட்டது. இரு மகன்கள் வீடு, உறவினர் வீடுகளுக்கு ரத்தினம் சென்று வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் இளைய மகன் வீட்டிற்கு ரத்தினம் வந்தார். கடந்த 5-ந் தேதி இரவு அவர் திடீரென இறந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக மூத்த மருமகள் காந்திமதி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரத்தினம் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X