என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்4 Jun 2017 8:22 AM GMT (Updated: 4 Jun 2017 8:22 AM GMT)
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.பி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இது இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடையுள்ளது. ஏற்கனவே இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை (5-ந்தேதி) மாலை 5.28 மணிக்கு 7-வது முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த ராக்கெட் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ‘இஸ்ரோ’ தலைவர் கிரண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை (5-ந்தேதி) மாலை 3.58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய மைல் கல்லாகும்” என்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.பி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இது இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடையுள்ளது. ஏற்கனவே இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை (5-ந்தேதி) மாலை 5.28 மணிக்கு 7-வது முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த ராக்கெட் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ‘இஸ்ரோ’ தலைவர் கிரண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் நாளை (5-ந்தேதி) மாலை 3.58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய மைல் கல்லாகும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X