search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து  விடுதலை சிறுத்தையினர் ரெயில் மறியல்: 100 பேர் கைது
    X

    மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தையினர் ரெயில் மறியல்: 100 பேர் கைது

    மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தையினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வில்லியனூர்:

    மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் விடுதலை சிறுத்தை கட்சியின் வில்லியனூர் தொகுதி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி போராட்டம் நடத்த தொகுதி செயலாளர் தமிழ்வளவன் தலைமையில் நிர்வாகிகள் ஆதவன், தமிழ்மாறன், வாகையரசு உள்ளிட்ட ஏராளமானோர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த ரெயிலை மறிக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 3 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×