search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டல் மண் எடுப்பது தொடர்பாக 2 கிராம முக்கியஸ்தர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை
    X

    வண்டல் மண் எடுப்பது தொடர்பாக 2 கிராம முக்கியஸ்தர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை

    ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக 2 கிராம முக்கியஸ்தர்களுடன் தாசில்தார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னப்பன் ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக மேலூர் கிராம மக்களுக்கும் கீழவெளி கைகளத்தெரு கிராம மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதை கண்டித்து ஒரு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதுதொடர்பாக இரு கிராம மக்களையும் அழைத்து பேசி தீர்வு காணப்படும் என்று தாசில்தார் அறிவித்திருந்தார். அதன்படி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தாசில்தார் திருமாறன், 2 கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரு கிராம மக்களிடையே பிரச்சினை ஏதும் ஏற்படாமல் வண்டல் மண் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்போது 2 கிராம முக்கியஸ்தர்களும் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். 
    Next Story
    ×