என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊத்தங்கரை அருகே முன்விரோதத்தால் பெண் உள்பட 3 பேருக்கு கத்தி குத்து
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி கிராமம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜிம்மோகன் (32). இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதை தொடர்ந்து இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்தார். இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட வி.சி. கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.
இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வி.சி கட்சியின் முன்னாள் மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்க தமிழ் சரவணன் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடந்து நேற்றிரவு மோகன் தரப்பினருக்கும், சங்க தமிழ் சரவணன் தம்பி சுருளி (32), என்பவருக்கும் தகராறு எற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன் தரப்பினர் கத்தியால் பல இடங்களில் வெட்டி உள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற சரவணன் மற்றும் சுருளி மனைவி மங்கம்மாள் (26) ஆகியோரையும் அரிவாளால் வெட்டினர். இதில் சுருளி என்பவர் கவலைக்கிடமாக உள்ளார். மேலும் படுகாயம் அடைந்த சரவணன், மங்கம்மாள் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் தொடர்ந்து இப்பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்