search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

    கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தை அடுத்த வேப்பத்தூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த உத்திராபதி மகன் பாலகுரு (வயது 27) இவர் கும்பகோணம் புது பஸ் நிலையம் அருகே வந்த போது 4 பேர் அவரை வழிபறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500 -ஐ பறித்து சென்றுவிட்டனர்.

    இது பற்றி பாலகுரு கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பகோணம் தக்கன் காலனியை சேர்ந்த ரமேஷ் (30) அரசலாறு வெளிநடப்பை சேர்ந்த அலெக்ஸ் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கார்த்தி, பாலா என்ற ஜெயபாலன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×