search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வள்ளுவர்கோட்டத்தில் நாளை வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    வள்ளுவர்கோட்டத்தில் நாளை வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசின் தேச விரோத போக்கை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை காலை வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மத்திய அரசின் வணிகர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத போக்கை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை (30-ந் தேதி) செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தர் ராஜன் முன்னிலை வகிக்கிறார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மாவட்ட செயலாளர் துரை மாணிக்கம், பொருளாளர் பீர்முகமது, மாநில துணைத் தலைவர் பி.கணேசன் மற்றும் மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை மணி, மணலி சண்முகம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தர்ராஜன் சிறப்பாக செய்து வருகிறார்.
    Next Story
    ×