என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே தண்ணீர் குடிக்க வேண்டும்: டாக்டர்கள் எச்சரிக்கை
Byமாலை மலர்28 May 2017 7:21 AM GMT (Updated: 28 May 2017 7:21 AM GMT)
சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே தண்ணீர் குடிக்க வேண்டும், இல்லாவிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகி மூச்சு திணறல் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
கோடை வெயில் சுட்டெரிப்பதால் கடும் வெப்பம் நிலவுகிறது. அதனால் பலர் வெப்ப நோய்களுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் வெப்ப நோய்களில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு டாக்டர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக பொதுமக்கள் தினமும் 12 முதல் 14 டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
ஆனால் இந்த அறிவுரை சிறுநீரகம் பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு பொருந்தாது. இவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறுநீரகம் செயல் இழந்து ரத்த சுத்திகரிப்பு செய்யும் நோயாளிகள் நாள் ஒன்றுக்கு 32 அவுன்ஸ் அல்லது 1000 மிலி அதாவது 1 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.
சிறுநீரகம் செயல்பாடு இழந்தவர்கள் சிறுநீர் வெளியேறும் அளவு மட்டுமே மிக குறைந்தஅளவாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் உடலில் இருந்து கூடுதல் அளவு சிறுநீரை வெளியேற்றும் திறனை சிறுநீரகம் இழந்து விடும்.
இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி இதயம் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடை வெயில் சுட்டெரிப்பதால் கடும் வெப்பம் நிலவுகிறது. அதனால் பலர் வெப்ப நோய்களுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் வெப்ப நோய்களில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு டாக்டர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக பொதுமக்கள் தினமும் 12 முதல் 14 டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
ஆனால் இந்த அறிவுரை சிறுநீரகம் பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு பொருந்தாது. இவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறுநீரகம் செயல் இழந்து ரத்த சுத்திகரிப்பு செய்யும் நோயாளிகள் நாள் ஒன்றுக்கு 32 அவுன்ஸ் அல்லது 1000 மிலி அதாவது 1 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.
சிறுநீரகம் செயல்பாடு இழந்தவர்கள் சிறுநீர் வெளியேறும் அளவு மட்டுமே மிக குறைந்தஅளவாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் உடலில் இருந்து கூடுதல் அளவு சிறுநீரை வெளியேற்றும் திறனை சிறுநீரகம் இழந்து விடும்.
இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி இதயம் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X