search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
    X

    அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்

    அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.  பூமிநாதனம், ரவிவளவன், மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் ஜூன்-15 அன்று ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ள வரும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அரியலூர் புறவழிச்சாலையில் சிறப்பாக வரவேற்பு அளித்து அழைத்து செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில பொறுப்பாளர்கள் அன்பானந்தம், தனகோடி, ஆகியோர் சிறப்பு அழைப் பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் எனவும் தொண்டர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுகூட்டத்தை சிறப்பாக நடத்தவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

    இந்த கூட்டத்தில் வங்குடி திருஞானம் மருதவாணன், சுதாகர், இராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  நிறைவாக நகர பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
    Next Story
    ×