search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: பேக்கரி ஊழியர் தலைமறைவு
    X

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: பேக்கரி ஊழியர் தலைமறைவு

    கோவையில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த பேக்கரி ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 32). இவர் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார்.

    இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கணபதியை சேர்ந்த உறவினர் ஒருவரின் மகளான பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகினார்.

    பிரேம்குமாரின் ஆசை வார்த்தையில் மாணவி வீழ்ந்தார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மாணவியை பிரேம்குமார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் மாணவி கர்ப்பமடைந்தார். எனினும் வீட்டுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்ட குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவரிடம் விசாரித்த போது தனது கர்ப்பத்துக்கு பிரேம் குமார் என்பதை கூறினார். இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 19-ந்தேதி குழந்தை பிறந்தது.

    இதுகுறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையறிந்த பிரேம் குமார் தலைமறை வாகி விட்டார்.

    போலீசார் பிரேம்குமார் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×