என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: பேக்கரி ஊழியர் தலைமறைவு
Byமாலை மலர்27 May 2017 11:45 AM GMT (Updated: 27 May 2017 11:45 AM GMT)
கோவையில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த பேக்கரி ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 32). இவர் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார்.
இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கணபதியை சேர்ந்த உறவினர் ஒருவரின் மகளான பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகினார்.
பிரேம்குமாரின் ஆசை வார்த்தையில் மாணவி வீழ்ந்தார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மாணவியை பிரேம்குமார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவி கர்ப்பமடைந்தார். எனினும் வீட்டுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்ட குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவரிடம் விசாரித்த போது தனது கர்ப்பத்துக்கு பிரேம் குமார் என்பதை கூறினார். இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 19-ந்தேதி குழந்தை பிறந்தது.
இதுகுறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையறிந்த பிரேம் குமார் தலைமறை வாகி விட்டார்.
போலீசார் பிரேம்குமார் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 32). இவர் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார்.
இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கணபதியை சேர்ந்த உறவினர் ஒருவரின் மகளான பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகினார்.
பிரேம்குமாரின் ஆசை வார்த்தையில் மாணவி வீழ்ந்தார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மாணவியை பிரேம்குமார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவி கர்ப்பமடைந்தார். எனினும் வீட்டுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்ட குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவரிடம் விசாரித்த போது தனது கர்ப்பத்துக்கு பிரேம் குமார் என்பதை கூறினார். இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 19-ந்தேதி குழந்தை பிறந்தது.
இதுகுறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையறிந்த பிரேம் குமார் தலைமறை வாகி விட்டார்.
போலீசார் பிரேம்குமார் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X