search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி மாவட்டத்தில் பலத்த மழை
    X

    தர்மபுரி மாவட்டத்தில் பலத்த மழை

    தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக் கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக் கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரி வருவதால் இந்த மழை நீர் தேங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்து உள்ளனர்.

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பென்னாகரம் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பாளையம் புதூரில் இடியுடன் மழை பெய்தது.

    இடிதாக்கி மின் சப்ளை அதிகமாகி நிறைய வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன.

    Next Story
    ×