search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது

    ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள கோவில்பாறையைச் சேர்ந்த மலைச்சாமி மகன் ஆனந்தன். (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவி (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருடன் பழகி வந்துள்ளார்.

    தேவி பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 செல்ல உள்ளார். மாணவியிடம் ஆசையாக பேசி தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனந்தன் கூறியுள்ளார். மேலும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த விபரம் தேவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் ஆனந்தனை கண்டித்தனர். மேலும் இனிமேல் தனது மகளை பார்க்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன் மாணவி தேவியை கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.

    கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் தேவியின் பெற்றோர் புகார் அளித்தனர். தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×