என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தண்டையார்பேட்டையில் குடங்களுடன் பெண்கள் மறியல்: தண்ணீர் லாரி சிறைபிடிப்பு
ராயபுரம்:
தண்டையார்பேட்டையில் சாஸ்திரிநகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கியுள்ளனர். அங்கு சில நாட்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை.
இதுகுறித்து பலதடவை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்களும், பொதுமக்களும் இன்று மதியம் எண்ணூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி சிறைபிடித்தனர். தகவல் அறிந்ததும் ஆர்.கே. நகர் போலீசார் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் கவுதம் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக எண்ணூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்