என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் கணவரை பிரிந்து வாலிபருடன் வாழ்ந்த இளம்பெண் திடீர் தற்கொலை
Byமாலை மலர்25 May 2017 11:50 AM GMT (Updated: 25 May 2017 11:50 AM GMT)
பல்லடத்தில் கணவரை பிரிந்து வாலிபருடன் வாழ்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
கோவை சூலூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ஹேமலதா (வயது 26). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.
இந்தநிலையில் ஹேமலதாவுக்கும், பிரகாசுக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஹேமலதா தனது மகனை அழைத்துக்கொண்டு கணவரை பிரிந்து சென்று விட்டார்.
ஹேமலதா பல்லடத்தில் தங்கி அங்குள்ள செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது கலையரசன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன்- மனைவி போன்று வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கலையரசன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கம் தாழ்போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் திறக்கவில்லை.
சந்தேகமடைந்த கலையரசன் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அப்போது ஹேமலதா தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹேமலதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சூலூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ஹேமலதா (வயது 26). இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார்.
இந்தநிலையில் ஹேமலதாவுக்கும், பிரகாசுக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஹேமலதா தனது மகனை அழைத்துக்கொண்டு கணவரை பிரிந்து சென்று விட்டார்.
ஹேமலதா பல்லடத்தில் தங்கி அங்குள்ள செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது கலையரசன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன்- மனைவி போன்று வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கலையரசன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கம் தாழ்போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் திறக்கவில்லை.
சந்தேகமடைந்த கலையரசன் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அப்போது ஹேமலதா தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹேமலதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X