search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகுளத்தூரில் சூறாவளியுடன் கனமழை: 12 வீடுகள் சேதம்
    X

    முதுகுளத்தூரில் சூறாவளியுடன் கனமழை: 12 வீடுகள் சேதம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நேற்று சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் 12 வீடுகள் இடிந்து சேதமானது.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் கோடை வெயில் வறுத்தெடுத்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.45 மணிக்கு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகதித்தது.

    சூறாவளியுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் கீழச்சாக்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சந்திரன், வேல்முருகன் உள்பட 12 பேரின் வீடுகள் இடிந்து சேதமானது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கோழிகளும், 2 கால்நடைகளும் பலியானது.

    வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    Next Story
    ×