search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூரில் இன்று கார் மோதி 3 வயது சிறுவன் பலி
    X

    திருச்செந்தூரில் இன்று கார் மோதி 3 வயது சிறுவன் பலி

    திருச்செந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள குடியிருப்பு விளையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தற்போது சென்னை பரங்கிமலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கோவில் திருவிழாவையொட்டி மகேந்திரன் குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான குடியிருப்புவிளைக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை மகேந்திரனின் 3 வயது மகன்மகேஸ்லிங்கம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் சதீஷ் கார் ஓட்டி வந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக சிறுவன் மகேஸ்லிங்கம் மீது கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் போலீசார் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் போலீசார் பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த சதீசை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×