search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. கார் மீது மோதிய பைக்
    X

    திண்டுக்கல்லில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. கார் மீது மோதிய பைக்

    திண்டுக்கல்லில் நேற்று இரவு எம்.எல்.ஏ. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

    திண்டுக்கல்:

    வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம், திண்டுக்கல் ஆர்.எம். காலனி 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டு முன்பு தனது காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்று விட்டார். இரவு 10 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவரது கார் மீது பயங்கரமாக மோதினர்.

    உடனே சத்தம் கேட்டு அவர் வெளியே வந்தார். இதைப்பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் விட்டு விட்டு அந்த வாலிபர்கள் ஓடத் தொடங்கினர். பைக் மோதியதில் காரின் முன் பக்கம் நொறுங்கி சேதமடைந்தது.

    இருந்த போதும் கார் மீது வேகமாக மோதியதால் 2 வாலிபர்களும் படுகாய மடைந்து வேகமாக ஓட முடியவில்லை. இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 18), வீரமணி (18) என தெரியவந்தது.

    இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேண்டுமென்றே எம்.எல்.ஏ. கார் மீது அவர்கள் மோதினார்களா? குடிபோ தையில் வந்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×