search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு
    X

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

    தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. 29-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான முதல்தாள் தேர்வு நடந்தது. இதற்கு கல்வி தகுதியாக ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து இருக்க வேண்டும். இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 598 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் தேர்வு எழுதினர்.

    அதன்பின்னர் 30-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்காக 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில், 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.


    இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான விடைகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், உரிய ஆதாரங்களுடன் வரும் 27-ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்த மேலும் தகவல்களை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) அறிந்துகொள்ளலாம்.
    Next Story
    ×