search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூரில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்
    X

    ஆத்தூரில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு வங்கி வாசலில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் ரோட்டில் பாரத் ஸ்டேட் வங்கி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சிட்டி யூனியன் வங்கி, யூனியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ஆகிய வங்கிகள் உள்ளன.

    இதில் ஒரு வங்கியின் வாசல் அருகே ரோட்டோரத்தில் உள்ள குப்பை மேட்டில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன.

    இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மிகச்சிறிய துண்டுகளாக வெட்டி சாக்கடையையொட்டி உள்ள குப்பையில் கொட்டியது யார் என்று தெரியவில்லை.

    இன்று காலை பழைய ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    Next Story
    ×