என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: 27-ந் தேதி வெளியாகிறது
சென்னை:
தமிழக அரசு நடத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 12-ந் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மாநில பாட வாரியத்தின் தேர்வு முடிவுகள் கடந்த காலங்களை விட சிறிது தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பாடவாரியத்தின் (சி.பி.எஸ்.இ) தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்களின் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது எதிர் பார்ப்பாக உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். இன்னும் ஒரு வாரம் வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சி.பி. எஸ்.இ அதிகாரிகள் கூறுகையில், சி.பி.எஸ்.இ. 12- வகுப்பு தேர்வு முடிவு தாமதமாக வில்லை. மே இறுதியில் தான் வெளியிடப்படும். இந்த வருடம் 27-ந் தேதி தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
இந்த வருடம் நாடு முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளனர். சென்னை மண்டலத்தில் 59 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்