search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து தொழிலதிபர் பலி
    X

    வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து தொழிலதிபர் பலி

    வேப்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    காட்பாடி அருகே உள்ள சென்னாங்குப்பத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). தொழிலதிபர். இவர் திருநெல்வேலியில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் அருள், செல்வராஜ், பார்த்திபன் ஆகியோர் உள்பட 7 பேருடன் காரில் சென்றார்.

    இன்று காலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பரந்தாமன் உள்பட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே தொழிலதிபர் பரந்தாமன் பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேருக்கும் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×