search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே கார் மோதி விபத்து: அ.தி.மு.க. நிர்வாகி பலி
    X

    மேலூர் அருகே கார் மோதி விபத்து: அ.தி.மு.க. நிர்வாகி பலி

    மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பலியானார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர்  27-வது வார்டான மலம்பட்டியை சேர்ந்தவர் ஆச்சி என்ற அய்யாவு (வயது 65) அ.தி.மு.க. அம்மா அணியின்  நகர்  எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும்,  மேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

    மேலூர் அருகே மணப்பட்டியை அடுத்துள்ள புரண்டிபட்டியில் உறவினர் இல்ல  துக்க  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று மதியம்  11 மணி அளவில் அய்யாவு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    புரண்டிபட்டி  அருகில் சென்று கொண்டு இருந்த போது  கேரளாவில் இருந்து  திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக  நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது  மோதியது.  இதில் தூக்கி வீசப்பட்ட  அய்யாவு  படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில்  சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலூர் சுங்கச்சாவடி விபத்து மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
    Next Story
    ×