என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருமாம்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி
Byமாலை மலர்16 May 2017 10:15 AM GMT (Updated: 16 May 2017 10:15 AM GMT)
கிருமாம்பாக்கம் அருகே தாறுமாறாக வந்த கார் மோதியதில் எல்.ஐ.சி. முகவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பாகூர்:
கடலூர் அண்ணா நகர் ஆர்.பி.எஸ். தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). எல்.ஐ.சி. முகவர். நேற்று இரவு இவரும், இவரது நண்பரான கடலூர் மஞ்சக்குப்பம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் புதுவை சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
கிருமாம்பாக்கம் அருகே காட்டு குப்பம் என்ற இடத்தில் வந்த போது, எதிரே தாறுமாறாக வந்த கார் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் உடல் நசுங்கி இறந்து போனார். கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் அண்ணா நகர் ஆர்.பி.எஸ். தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). எல்.ஐ.சி. முகவர். நேற்று இரவு இவரும், இவரது நண்பரான கடலூர் மஞ்சக்குப்பம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் புதுவை சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
கிருமாம்பாக்கம் அருகே காட்டு குப்பம் என்ற இடத்தில் வந்த போது, எதிரே தாறுமாறாக வந்த கார் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் உடல் நசுங்கி இறந்து போனார். கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X