என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் பாட்டி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்11 May 2017 11:43 AM GMT (Updated: 11 May 2017 11:43 AM GMT)
ஈரோட்டில் பாட்டி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, ரங்கயம்பாளையம், அன்னை சத்யாநகர், இரணியன் வீதியை சேர்ந்தவர் மணிசாமி, கார் டிரைவர். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கார்த்திகேயன் (வயது17), சதீஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் கார்த்திகேயன் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு கார்த்திகேயனின் பாட்டி பச்சியம்மாள் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.
பாட்டியின் இழப்பை கார்த்திகேயனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதிலிருந்து பாட்டி நினைவாகவே இருந்துள்ளார்.
சம்பவத்தன்றும் கார்த்திகேயன் பாட்டி பச்சியம்மாள் பற்றியே பேசி கொண்டிருந்தார். கார்த்திகேயனுக்கு அவனது தாய் மல்லிகா ஆறுதல் கூறி வந்தார்.
பின்னர் கார்த்திகேயன் தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
அருகில் இருந்தவர்கள் உதவுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, ரங்கயம்பாளையம், அன்னை சத்யாநகர், இரணியன் வீதியை சேர்ந்தவர் மணிசாமி, கார் டிரைவர். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கார்த்திகேயன் (வயது17), சதீஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் கார்த்திகேயன் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு கார்த்திகேயனின் பாட்டி பச்சியம்மாள் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.
பாட்டியின் இழப்பை கார்த்திகேயனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதிலிருந்து பாட்டி நினைவாகவே இருந்துள்ளார்.
சம்பவத்தன்றும் கார்த்திகேயன் பாட்டி பச்சியம்மாள் பற்றியே பேசி கொண்டிருந்தார். கார்த்திகேயனுக்கு அவனது தாய் மல்லிகா ஆறுதல் கூறி வந்தார்.
பின்னர் கார்த்திகேயன் தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
அருகில் இருந்தவர்கள் உதவுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X