என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் மலை கிராமங்களில் வெளுத்து வாங்கிய மழை
Byமாலை மலர்11 May 2017 11:05 AM GMT (Updated: 11 May 2017 11:05 AM GMT)
கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னவனூர்:
பருவமழை பொய்த்து போனதால் மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மறறும் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நீடித்தது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகின.
இதனால் நஷ்டம் அடைந்தனர் கொடைக்கானல் நகர் பகுதியிலும் வறட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே அனைவரும் மழையை எதிர்பார்த்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் கொடைக்கானல் நகர் பகுதியில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. சிறிது இடைவெளிவிட்டு மாலையில் தொடங்கிய மழை இரவு 12 மணிவரை நீடித்தது.
இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, கும்பூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். உருளை கிழங்கு, பூண்டு, கேரட், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இந்த மழை தொடர்ந்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பருவமழை பொய்த்து போனதால் மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மறறும் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நீடித்தது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகின.
இதனால் நஷ்டம் அடைந்தனர் கொடைக்கானல் நகர் பகுதியிலும் வறட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே அனைவரும் மழையை எதிர்பார்த்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் கொடைக்கானல் நகர் பகுதியில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. சிறிது இடைவெளிவிட்டு மாலையில் தொடங்கிய மழை இரவு 12 மணிவரை நீடித்தது.
இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, கும்பூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். உருளை கிழங்கு, பூண்டு, கேரட், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இந்த மழை தொடர்ந்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X