search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஒரு வாரத்தில் அறிவிப்பு
    X

    தீபா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஒரு வாரத்தில் அறிவிப்பு

    தீபா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என அப்பேரவையின் தலைமை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைவின் மாவட்டச் செயலாளருக்கான நேர்காணல் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடந்தது. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் நேரடிப் பார்வையில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளருக்கான விண்ணப்ப படிவத்திற்கோ, வேட்பு மனுவிற்கு கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யாதது இந்தியாவில் உள்ள அரிசயல் கட்சிகளிலேயே முன் மாதிரியாக நேர்காணல் நடத்தப்பட்டது.

    தமிழகம் முழுவதிலிருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தவர்களை மட்டும் அல்லாமல் அனைத்துக் கடைக்கோடி தொண்டர்களையும் தீபா சந்தித்து உரையாடினார்.

    தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் ஆரவாரத்துடன் எழுச்சியோடு அதே நேரம் அண்ணாவின் கூற்றுப்படி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து தங்கள் விருப்ப மனுக்களை போட்டி மனப்பான்மை இல்லாமல் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியோடு தாக்கல் செய்தார்கள்.

    மொத்தம் 52 மாவட்டங்களுக்கு 1258 பேர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறியியல் பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், சாதி, மத வேறுபாடின்றி தமிழன் என்ற உணர்வோடு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றுவதற்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

    பேரவையின் தலைமை மற்றும் உயர் மட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவிகளும், பொறுப்புகளும் வழங்கப்படும். இளைஞர்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×