என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேரையூர் அருகே இளம்பெண் கடத்தல்: போலீசார் விசாரணை
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சாப்டூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயசீலி (வயது19).
நேற்று தேவாலயம் சென்ற இவர், அங்கிருந்து திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங் களில் தேடியும் தகவல் கிடைக்காததால் சாப்டூர் போலீசில் செல்வராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஜெயசீலி செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. எனவே அவர் கடத்தப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி வித்யா (31). இவர்களுக்கு 2 மகனும், 2 மகளும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், வித்யா, கூத்தியார்குண்டுவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
அங்கிருந்து 26-ந்தேதி வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வித்யாவை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்