search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
    X

    வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம்பாளையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் நடுத்தெருவை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (வயது 42). இவர் குறுக்குசாலையில் உள்ள பெட்டிக்கடையில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. சுற்றி வளைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த மகுடேஸ்வரனை கைது செய்து 6 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்(53). இவர் கரூர் மாவட்டம், அண்ணாநகரில் பெட்டிக்கடையில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×