search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் உறவினர் பலி
    X

    திருச்சியில் கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் உறவினர் பலி

    கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் உறவினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி கண்டோன் மெண்ட் ரெனால்ட்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 45). ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர் அன்பில்மகேஷ்பொய்யா மொழியின் உறவினர் ஆவார்.

    இந்நிலையில் நேற்று அன்பில்மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ. அமெரிக்கா சென்றார். இதையடுத்து அவரை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்து விட்டு பாஸ்கரன் மற்றும் திருச்சி காட்டூரை சேர்ந்த காஜா முகைதீன், மருதூரை சேர்ந்த சுந்தரபாண்டி, மணப்பாறை பன்னப்பட்டியை சேர்ந்த பிரசாத் ஆகியோர் ஒரு காரில் திருச்சிக்கு புறப்பட்டனர். காரை மணப்பாறையை சேர்ந்த பிரவீன் ஓட்டினார். காரின் முன் இருக்கையில் பாஸ்கரன் அமர்ந்திருந்தார்.

    இன்று அதிகாலை திருச்சி சமயபுரம் அருகே சிறுகனூர் நான்கு வழிச் சாலையில் வரும் போது முன்னால் சென்ற வாகனம் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாஸ்கரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×