என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிட்லபாக்கத்தில் கால் டாக்சி டிரைவரை வெட்டி மொபைல் பறிப்பு
Byமாலை மலர்29 April 2017 11:36 AM GMT (Updated: 29 April 2017 11:36 AM GMT)
சிட்லபாக்கத்தில் கால் டாக்சி டிரைவரை வெட்டி மொபைலை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிவா (25). கால் டாக்சி டிரைவர். நேற்று இரவு சிவாவின் போனில் கார் கேட்டு ராதா நகரில் இருந்து அழைப்பு வந்தது.
உடனே காரில் ராதா நகர் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் காரை வழிமறித்தனர். ஆனால் சிவா காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.
ராதா நகரில் கார் கேட்டிருந்த வீட்டின் முன்பு பயணியின் வருகைக்காக காத்து நின்றார். அங்கிருந்து ஒரு பெண் பயணி காருக்கு வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்களும் அந்த பெண்ணிடம் இருந்த மொபைல் போனை பிடிங்கினார்கள்.
டிரைவர் சிவாவிடமும் மொபைல் போனை கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததும் கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டினார்கள். பின்னர் அவரது மொபைல் போனை பறித்து கொண்டு சென்று விட்டனர்.
காயம் அடைந்த சிவா குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை வெட்டியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிவா (25). கால் டாக்சி டிரைவர். நேற்று இரவு சிவாவின் போனில் கார் கேட்டு ராதா நகரில் இருந்து அழைப்பு வந்தது.
உடனே காரில் ராதா நகர் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் காரை வழிமறித்தனர். ஆனால் சிவா காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.
ராதா நகரில் கார் கேட்டிருந்த வீட்டின் முன்பு பயணியின் வருகைக்காக காத்து நின்றார். அங்கிருந்து ஒரு பெண் பயணி காருக்கு வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்களும் அந்த பெண்ணிடம் இருந்த மொபைல் போனை பிடிங்கினார்கள்.
டிரைவர் சிவாவிடமும் மொபைல் போனை கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததும் கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டினார்கள். பின்னர் அவரது மொபைல் போனை பறித்து கொண்டு சென்று விட்டனர்.
காயம் அடைந்த சிவா குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை வெட்டியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X