search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணை கட்டிபோட்டு கொள்ளை: தாய்-மகளுக்கு 2 ஆண்டு ஜெயில்
    X

    பெண்ணை கட்டிபோட்டு கொள்ளை: தாய்-மகளுக்கு 2 ஆண்டு ஜெயில்

    திருவொற்றியூர் அருகே பெண்ணை கட்டிபோட்டு நகை கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் தாய்-மகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவொற்றியூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் புதுத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி ஆதிலட்சுமி. கடந்த 2015-ம் ஆண்டு ஆதிலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது 2 பெண்கள் வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் வந்தனர்.

    2 பேரும் ஆதிலட்சுமியை கட்டி போட்டு 25 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையர்களை தாய்-மகளான செந்தாமரை, ஹாசினியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவொற்றியூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பு அளித்த நீதிபதி வசந்த்குமார் தாய்-மகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

    Next Story
    ×