search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே வீடுகளில் உல்லாசம்: விபசார கும்பல் சிக்கியது
    X

    தேனி அருகே வீடுகளில் உல்லாசம்: விபசார கும்பல் சிக்கியது

    உத்தமபாளையத்தில் வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் உப்புதரிசு பகுதியில் விபசாரம் அவ்வப்போது நடந்து வந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனி தாமஸ் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து சிலர் விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டி.எஸ்.பி. அண்ணாமலை உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சாதாரண உடையில் புகார் வந்த இடங்களில் ரகசிய சோதனை நடத்தினர்.

    அப்போது சந்தேகப்படும் படியான நபர்கள் உள்ளே சென்றது தெரிய வந்தது. இதன் பின் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு சில போலீசார் சாதாரண உடையில் வீட்டுக்குள் சென்று அக்கும்பலை சுற்றி வளைத்தனர்.

    இவர்கள் விபசாரத்திற்கு போன், வாட்ஸ்-அப் போன்றவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இதுதவிர சில புரோக்கர்கள் பஸ் நிலையங்களில் நிற்கும் டிப்டாப் ஆசாமிகளை குறிவைத்து அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

    பின்னர் அவர்களிடம் பணத்தை கறந்து விட்டு அனுப்பி விடுகின்றனர். இதுபோல பல வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்திருந்த இந்த கும்பல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலிமேட்டுப்பட்டியில் ஒருவரை கட்டாயப்படுத்தி விபசாரத்திற்கு அழைத்த போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியானது.

    இதனையடுத்து போலீசார் புரோக்கர்களாக செயல்பட்ட நல்லமுத்துகழுவன் (25), ராஜ்குமார் (24), பிரபு (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் பிடித்து தேனியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல தண்ணீர் தொட்டி பகுதியிலும் தனியார் வீட்டில் விபசாரம் நடப்பதாகவும் அதனையும் போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

    Next Story
    ×