என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் இன்றி தவிப்பு: திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் போராட்டம்
Byமாலை மலர்28 April 2017 12:33 PM GMT (Updated: 28 April 2017 12:33 PM GMT)
திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.-யில் குடிநீர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு தொழில் பிரிவுகளின் கீழ் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாகவே தொழிற்பயிற்சி நிலையத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது. கழிவறையிலும் தண்ணீர் இல்லாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டு வந்ததால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாணவர்கள் பல முறை முதல்வரிடமும், ஐ.டி.ஐ. நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஐ.டி.ஐ. மாணவர்கள் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வீரக்குமார் உள்பட ஐ.டி.ஐ. மாணவர்கள் 100-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு தொழில் பிரிவுகளின் கீழ் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாகவே தொழிற்பயிற்சி நிலையத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது. கழிவறையிலும் தண்ணீர் இல்லாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டு வந்ததால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாணவர்கள் பல முறை முதல்வரிடமும், ஐ.டி.ஐ. நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஐ.டி.ஐ. மாணவர்கள் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வீரக்குமார் உள்பட ஐ.டி.ஐ. மாணவர்கள் 100-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X