என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
Byமாலை மலர்28 April 2017 11:30 AM GMT (Updated: 28 April 2017 11:30 AM GMT)
மதுரையில் போலீஸ் என்று கூறி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 வாலிர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:
ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (42), ஆட்டோ டிரைவர். இவர் சோலையழகுபுரம் பகுதியில் ஆட்டோவில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் இளங்கோவை வழிமறித்து, நாங்கள் போலீஸ், ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்தனர். அதற்கு இளங்கோவன் ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு 3 பேரும் இளங்கோவிடம் பணம் கேட்டுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர், 3 பேரிடமும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி இளங்கோ வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்து 200-ஐ பறித்துக் கொண்டு தப்பினர்.
இது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் தொடர்புடைய திருப்புவனம் செல்வகணேஷ் (27), ராஜசேகர் (28), மேலூர் நாகூர்கனி (27) ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (42), ஆட்டோ டிரைவர். இவர் சோலையழகுபுரம் பகுதியில் ஆட்டோவில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் இளங்கோவை வழிமறித்து, நாங்கள் போலீஸ், ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்தனர். அதற்கு இளங்கோவன் ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு 3 பேரும் இளங்கோவிடம் பணம் கேட்டுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர், 3 பேரிடமும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி இளங்கோ வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்து 200-ஐ பறித்துக் கொண்டு தப்பினர்.
இது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் தொடர்புடைய திருப்புவனம் செல்வகணேஷ் (27), ராஜசேகர் (28), மேலூர் நாகூர்கனி (27) ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X