என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாரடைப்பால் இறந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்28 April 2017 8:59 AM GMT (Updated: 28 April 2017 8:59 AM GMT)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாரடைப்பால் இறந்த அ.தி.மு.க. தொண்டர் வீட்டுக்கு சென்று ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
ராயபுரம்:
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 71). அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தொண்டர். இவர் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து மனம் உடைந்து காணப்பட்டார். அ.தி.மு.க. பிளவு பட்டதால் வேதனை அடைந்த அவர் பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார்.
இதற்கிடையே ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் மனம் உடைந்தார். இதனால் அவர் கடந்த 11-ந்தேதி மாரடைப்பால் இறந்தார்.
இந்த நிலையில் அவரது படத் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ராமதாஸ் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரது படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 71). அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தொண்டர். இவர் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து மனம் உடைந்து காணப்பட்டார். அ.தி.மு.க. பிளவு பட்டதால் வேதனை அடைந்த அவர் பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார்.
இதற்கிடையே ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் மனம் உடைந்தார். இதனால் அவர் கடந்த 11-ந்தேதி மாரடைப்பால் இறந்தார்.
இந்த நிலையில் அவரது படத் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ராமதாஸ் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரது படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X