search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே தின கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்
    X

    மே தின கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்

    தே.மு.தி.க. சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக கழக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தே.மு.தி.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரத்தில் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக கழக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், பேரவையில் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் தோழர்கள், மகளிர் அணியினர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×