என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் பலத்த மழை
Byமாலை மலர்27 April 2017 3:49 PM GMT (Updated: 27 April 2017 3:49 PM GMT)
வறட்சி நீடித்து வந்த நிலையில் கொடைக் கானலில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவும். ஆனால் தற்போது பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். நகர் பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக குடிநீர் மட்டு மல்லாது உப்பு தண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கொடைக்கானலில் நிலவிய பருவநிலை மாற்றத்தினால் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே நேற்றிரவு திடீரென சாரல் மழையாக தொடங்கி பலத்த மழையாக ஒரு மணிநேரம் நீடித்தது.
இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக சாலை மறியல் போராட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் பெய்துள்ள கோடை மழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை உள்ளது. எனவே இந்த மழை தொடர்ந்தால் மட்டுமே விவசாய பணிகள் செய்யமுடியும் என்றனர்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவும். ஆனால் தற்போது பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். நகர் பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக குடிநீர் மட்டு மல்லாது உப்பு தண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கொடைக்கானலில் நிலவிய பருவநிலை மாற்றத்தினால் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே நேற்றிரவு திடீரென சாரல் மழையாக தொடங்கி பலத்த மழையாக ஒரு மணிநேரம் நீடித்தது.
இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக சாலை மறியல் போராட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் பெய்துள்ள கோடை மழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை உள்ளது. எனவே இந்த மழை தொடர்ந்தால் மட்டுமே விவசாய பணிகள் செய்யமுடியும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X