search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கிய கொத்தனார் கைது
    X

    வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கிய கொத்தனார் கைது

    வேதாரண்யம் அருகே குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுத்சேத்தியை சேர்ந்த பாப்பையன் மகன் ராமச்சந்திரன் (வயது 34) தொழிலாளி. இவர் மருதூர் கடைத் தெருவில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது நடுசேத்தி கிழக்கு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் சத்தியமூர்த்தி (23) குடிபோதையில் வந்துள்ளார். அவர் ராமச்சந்திரனிடம் தகராறு செய்து அவரை கொத்தனார் வேலைக்கு பயன்படுத்தும் கரனையால் தலையில் தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த ராமச்சந்திரன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனார் சத்திய மூர்த்தியை கைது செய்தார்.
    Next Story
    ×