search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடவள்ளி அருகே பெண்ணை தாக்கி 3½ பவுன் செயின் பறிப்பு
    X

    வடவள்ளி அருகே பெண்ணை தாக்கி 3½ பவுன் செயின் பறிப்பு

    வடவள்ளி அருகே பெண்ணை தாக்கி 3½ பவுன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். விவசாயி. இவரது மனைவி சுமதி (வயது 48).

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    கே.எம். நகர் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து சுமதியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை கீழே தள்ளி தாக்கி பறிக்க முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட சுமதி செயினை பறிக்க விடாமல் இறுக்கி பிடித்தார்.

    அப்போது செயின் இரண்டாக அறுந்தது. உடனே கொள்ளையர் தங்களது கையில் சிக்கிய 3½ பவுன் அறுந்த செயினுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சுமதி இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×