search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் விபத்து: தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    கோவையில் விபத்து: தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

    கோவையில் தனியார் பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சலிவன்தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(வயது 53). தொழிலாளி. இவர் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினார். சுங்கம் டெப்போ அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மாதவராஜ் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பஸ் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மாதவராஜ் ஹெல்மெட் அணிந்திருந்தார். என்றாலும் பஸ் ஏறியதில் ஹெல்மெட் உடைந்து தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவஇடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×