என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உத்தமபாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். (வயது 57). இவர் கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை நைசாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனோகரனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினரும், சிறுமியின் குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு அனுப்பிய கடித்தில் மனோகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கலெக்டர் வெங்கடாசலத்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மனோகரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்