search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டராம்பட்டு அருகே பைக் திருடிய பாலிடெக்னிக் மாணவன் கைது
    X

    தண்டராம்பட்டு அருகே பைக் திருடிய பாலிடெக்னிக் மாணவன் கைது

    தண்டராம்பட்டு பகுதியில் பைக் திருடிவிட்டு தப்ப முயன்ற பாலிடெக்னிக் மாணவனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு, வாழவச்சானூர் பகுதியை சேர்ந்தவர் கலாநிதிமாறன் (வயது 20). இவர் விழுப்புரம் மாவட்டம், தங்கராபுரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    விடுமுறையில் வீட்டில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வாழவச்சானூர் பகுதியில் நின்றிருந்த பைக்கை திருடி கொண்டு வேகமாக தப்ப முயன்றார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற மற்றொரு பைக் மீது மோதியுள்ளார்.

    அதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த மாணவனை பிடித்து விசாரித்ததில் பைக் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, வானாபுரம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். போலீசார் மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×