என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் அருகே குடிநீர் பிடிக்கும் தகராறில் கல்லூரி ஊழியர் அடித்து கொலை
Byமாலை மலர்26 April 2017 9:55 AM GMT (Updated: 26 April 2017 9:55 AM GMT)
மாமல்லபுரம் அருகே குடிநீர் பிடிக்கும் தகராறில் கல்லூரி ஊழியர் அடித்து கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 25). நெம்மேலி அரசு கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமனின் மனைவி தரணிக்கும் மீனாட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ராமனின் தரப்பினர் மீனாட்சியின் மகன் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராமன், அவரது மனைவி தரணி, தேவன் ஆகியோரை கைது செய்தனர்.
மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 25). நெம்மேலி அரசு கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமனின் மனைவி தரணிக்கும் மீனாட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ராமனின் தரப்பினர் மீனாட்சியின் மகன் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராமன், அவரது மனைவி தரணி, தேவன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X