என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெண் வியாபாரியிடம் மாமூல் கேட்டதை கண்டித்த தொழிலாளி வெட்டிக்கொலை
வில்லிவாக்கம்:
கொரட்டூர் ரெயில் நிலையம் சாலையில் வசித்து வந்தவர் சங்கர் (வயது 42), கூலித்தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா. மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கொரட்டூர் ரெயில் நிலையத்தில் மனைவியை அழைத்து செல்வதற்காக சங்கர் காத்திருந்தார். அப்போது 3 வாலிபர்கள் பழம் வியாபாரம் செய்யும் ஒரு பெண்ணிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டினர். இதனை சங்கர் கண்டித்தார்.
இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கரை சரமாரியாகவெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாபிராமை சேர்ந்த ரவுடி சுரேஷ், கண்ணனை கைது செய்தனர். விக்கி தலைமறைவாகி விட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்