என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்25 April 2017 10:14 AM GMT (Updated: 25 April 2017 10:14 AM GMT)
திசையன்விளை அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை- நாங்குநேரி சாலையில் வாழைத்தோட்டம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வாழைத் தோட்டம் கிராம மக்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திசையன்விளை- நாங்குநேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை- நாங்குநேரி சாலையில் வாழைத்தோட்டம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வாழைத் தோட்டம் கிராம மக்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திசையன்விளை- நாங்குநேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X