search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
    X

    ராமநாதபுரத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

    ராமநாதபுரத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அபிராம சுந்தரி. இவர்களது மகள் மங்கையர்கரசி என்ற கமலி (வயது 21). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி மங்கையர்கரசி சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அபிராம சுந்தரி கீழக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

    Next Story
    ×