என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க பதவியை ஏலம் விடுகின்றனர்: ஸ்டாலின்
Byமாலை மலர்25 April 2017 7:51 AM GMT (Updated: 25 April 2017 7:52 AM GMT)
தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பதவியை ஏலம் விடுகின்றனர் என திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூரில் விவசாயத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது விவசாய கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் வெங்கையாநாயுடு இதுபற்றி தெரியாமல் பேசி வருகிறார்.
தமிழகத்தில் பதவியை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஜெயக்குமார் நிதி அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தருவதாக கூறுகிறார். கவர்னர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்படி பதவியை ஏலம்போடக்கூடாது. ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிந்து சென்ற அணியினருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் மூடப்பட்ட மதுபான கடைகளை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. மத்தியஅரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதனை எதிர்த்து பெரியஅளவில் போராட்டம் நடத்துவோம்.
போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை போலீசார் கைது செய்தனர். எங்களை அழைத்து செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் 4 கி.மீட்டர் தூரம் நடக்க வைத்து தனியார் மண்டபத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூரில் விவசாயத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது விவசாய கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் வெங்கையாநாயுடு இதுபற்றி தெரியாமல் பேசி வருகிறார்.
தமிழகத்தில் பதவியை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஜெயக்குமார் நிதி அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தருவதாக கூறுகிறார். கவர்னர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்படி பதவியை ஏலம்போடக்கூடாது. ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிந்து சென்ற அணியினருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் மூடப்பட்ட மதுபான கடைகளை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. மத்தியஅரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதனை எதிர்த்து பெரியஅளவில் போராட்டம் நடத்துவோம்.
போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை போலீசார் கைது செய்தனர். எங்களை அழைத்து செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் 4 கி.மீட்டர் தூரம் நடக்க வைத்து தனியார் மண்டபத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X