search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் செம்மரக்கட்டை கடத்தல்
    X

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் செம்மரக்கட்டை கடத்தல்

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த சொகுசு காரை சோதனை செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்தனர்.
    பெரியபாளையம்:

    பெரிய பாளையத்தில் உள்ள மேம்பாலம் அருகே நேற்று இரவு சொகுசு கார் வேகமாக வந்தது.

    திடீரென அந்த கார் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. இதில் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சொகுசு காரை விரட்டிச் சென்றனர்.

    போலீசார் பின்தொடர்வதை கண்டதும் பனப்பாக்கம் அருகே சாலை ஓரத்தில் சொகுசு காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    காரை போலீசார் சோதனை செய்த போது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தன. இதையடுத்து செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம கும்பல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரங்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    காரின் பதிவு எண்ணை வைத்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×