என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம்: அய்யாகண்ணு
Byமாலை மலர்25 April 2017 5:09 AM GMT (Updated: 25 April 2017 5:09 AM GMT)
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மே 25-ந்தேதி மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடருவோம் என சென்னை திரும்பிய அய்யாகண்ணு கூறியுள்ளார்.
சென்னை:
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 40 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு சென்னை திரும்பினர்.
இன்று தமிழகத்தில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அய்யா கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னிடம் ஆடி கார் இருக்கிறது. மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றெல்லாம் வதந்தியை பரப்புகிறார்கள். எனக்கு 20 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே உள்ளது.
தற்கொலை செய்து மடியும் விவசாயிகளை காப்பதற்காக டெல்லியில் போராட்டத்தை நடத்தினோம். எங்கள் போராட்டத்தை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. நிர்வாணமாக ஓடியும் பார்த்தோம். அப்படியும் கண்டு கொள்ளவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் எல்லாம் வந்து சந்தித்து பேசினார்கள். அவ்வளவு பெரிய தலைவர்கள் கேட்டு கொண்ட பிறகும் போராட்டத்தை கைவிடாமல் இருந்தால் நல்லதல்ல என்பதற்காகத் தான் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கி இருக்கும் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதை மத்திய அரசும், மாநில அரசும் தட்டி கழிக்க முடியாது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் அடுத்த மாதம் 25-ந் தேதி டெல்லி சென்று போராட்டத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 40 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு சென்னை திரும்பினர்.
இன்று தமிழகத்தில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அய்யா கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னிடம் ஆடி கார் இருக்கிறது. மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றெல்லாம் வதந்தியை பரப்புகிறார்கள். எனக்கு 20 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே உள்ளது.
தற்கொலை செய்து மடியும் விவசாயிகளை காப்பதற்காக டெல்லியில் போராட்டத்தை நடத்தினோம். எங்கள் போராட்டத்தை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. நிர்வாணமாக ஓடியும் பார்த்தோம். அப்படியும் கண்டு கொள்ளவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் எல்லாம் வந்து சந்தித்து பேசினார்கள். அவ்வளவு பெரிய தலைவர்கள் கேட்டு கொண்ட பிறகும் போராட்டத்தை கைவிடாமல் இருந்தால் நல்லதல்ல என்பதற்காகத் தான் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கி இருக்கும் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதை மத்திய அரசும், மாநில அரசும் தட்டி கழிக்க முடியாது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் அடுத்த மாதம் 25-ந் தேதி டெல்லி சென்று போராட்டத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X