என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருபுவனை என்.ஆர்.காங். பிரமுகர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை
புதுச்சேரி:
திருபுவனையை சேர்ந்த தொழில் அதிபரும், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருமான வேலழகன் கடந்த 19-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்கவில்லை.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினார்கள். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் 3 பேருக்கும் கொலையில் முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். எனவே, தான் அவர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்
இந்த 3 பேரிடமும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் விசாரணை நடத்த உள்ளார். அவர் விசாரணை நடத்திய பிறகு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதி பிரபல ரவுடி ஒருவரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் கூலிப்படையாக செயல்பட்டு கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி விசாரணை நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்